இந்தியா, ஏப்ரல் 1 -- தமிழகத்தின் அண்மை புள்ளி விவரப்படி காசநோய் குறைந்துள்ளதைப்போல் தெரிந்தாலும், உண்மையில் குறைந்துள்ளதா என்பதை தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது விவரங்கள்

தமிழகத்தில் 2023ம் ஆண்டு 23 லட்சம் பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 95,296 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு 32 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 93,301 காசநோயாளிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 1995 பேர் குறைவாக காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2015ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 1253 பேருக்கு பரிசோத்தித்துள்ளனர். ஆனால் 2024ல் அது 4,198 பேருக்கு பரிசோதித்துள்ளனர். எனவே பரிசோதனைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டும், காசநோய் பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ம் ஆண்டு மற்றொரு புள்ள...