இந்தியா, ஜூன் 21 -- அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் உள்ளதாக அரசுப் பேருந்திலிருந்து சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து உள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்புற அச்சு உடைந்து, இரு பின் சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு மற்றும் அதன் பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், "கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற அச்சு உடைந்து, இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியுள்ளன. இந்த விபத்தில் கல்லூரி மாண...