இந்தியா, மே 21 -- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்து இருந்தார். குறிப்பாக தெய்வசெயல் மற்ற தி.மு.க நிர்வாகிகளிடம் பெண்களை அனுப்ப முயற்சித்தாகவும் அந்தப் பெண் கூறி புகார் அளித்து இருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரவியின் தலையீட்டை அந்தப் பெண் கோரிய பின்னரே போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீத...