இந்தியா, மே 2 -- பிஞ்சு கத்தரிப்பாய், உருளை, முருங்கை சேர்த்து தயாரிக்கப்படும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு உங்கள் தெருவையே மணக்கச்செய்யும். இந்த குழம்பை செய்வதற்கு சில பக்குவங்கள் தேவை. இதை வைக்கும்போது உளுந்து வெடிக்க விடக்கூடாது. கடுகு, வெந்தயத்தை பொரியவிட்டு செய்யவேண்டும். இதற்கு சேர்க்கும் கத்தரிக்காய் பிஞ்சு கத்தரிக்காயாக இருக்கவேண்டும். இதில் மொச்சைக் கொட்டையும் சேர்க்கலாம். சின்ன வெக்ஙாயம், பூண்டு புளி, தக்காளி என அனைத்தும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, மசாலத்தூள்களை தூவி, எண்ணெய் பிரிந்து வரும்போது கருவாட்டை போட்டு இறக்கினால், வரும் வாசம் தெருவையே மணக்கச் செய்யும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

* நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சோம்பு - கால் ஸ்பூன்

* பூண்டு - 15 பல...