இந்தியா, ஏப்ரல் 21 -- கூடல் மாநகரான மதுரைக்கு அருகே சோழவந்தான் என்ற ஊர் அருகே தென்கரை என்னும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி டி ஆர் மகாலிங்கம் பிறந்தார். தந்தை பெயர் தென்கரை ராமகிருஷ்ணன். இதுதான் டி ஆர் மகாலிங்கம் என அழைக்கப்பட காரணம்.

மகாலிங்கத்துடன் பிறந்தவர் ஆறு பேர். மற்ற ஐந்து பேரும் வேதம் படித்தவர்கள். நாடக நடிகர் ராமையாவின் உதவியுடன் ஜெகநாதர் ஐயரின் பிரபல வாய்ஸ் கம்பெனியின் பாலமோகன காந்த சபாவில் மகாலிங்கம் சேர்ந்தார்.

அப்பொழுது டி ஆர் மகாலிங்கத்தின் வயது 12. அதன் பிறகு எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடத்திய வள்ளி திருமணத்தில் வேலனாக நடித்தார். அந்த காலகட்டத்திலேயே டி ஆர் மகாலிங்கம் பாடிய காயாத கானகத்தை பாடல் நாடகம் பார்ப்பவர்களிடையே பெரிய கைத்தட்டளை வாங்கி கொடுத்தது.

1935 ஆம் ஆண்டு மகாலிங்கம் கிருஷ்ண லீலாவில் கிர...