இந்தியா, ஜூன் 3 -- * கம்பு - அரை கப்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தயிர் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

1. கம்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற‌ வைக்கவேஷ்டும்.

2. கம்பு ஊறியவுடன், அலசிவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதை 8 மணி நேரம் அல்லது ஓரிரவு புளிக்கவைக்கவேண்டும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து கரைத்து, கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவேண்டும்.

4. தொடர்ந்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் கெட்டியாகி வந்தவுடன் எடுத்து ஆறவைக்கவேண்டும். இதை மீண்டும் 8 மணி நேரம் வெளியில் வைத்து புளிக்க‌ விட‌வேண்டும்.

5. மீண்டும் 8 மணி நேரம் புளித்தவுடன், அ...