இந்தியா, ஜூன் 25 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை வீடு மாற்றிய நிலையில் இன்று (ஜூன் 25) நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சிவணாண்டியின் ஆட்கள் அபிராமி இருக்கும் வீட்டை கண்டுபுடித்து பரமேஸ்வரி பாட்டி குரலில் பேசி அவளை வெளியே வர வைத்து கடத்துகின்றனர். இன்னொரு பக்கம் முத்துவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் கூட்டு சேர்ந்து பரமேஸ்வரி பாட்டியின் வீட்டுக்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் கோயில் நகைகளை திருடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் கோயிலில் எல்லாரும் காத்த கொண்டிருக்க இங்கே நகை காணாமல் போனது தெரியாமல் கோவிலுக்கு கிளம்ப தயாராகுகிறாள். பிறகு அம...