இந்தியா, ஏப்ரல் 13 -- சமீபகாலமாக ஓடிடியின் பயன்பாடு மக்களிடத்தில் அதிகரித்து வந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா நோய் தொற்று என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு கொரோனா நோய் தொற்றிற்கு பின்னரே மக்கள் ஓடிடி தளத்தை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இந்த சமயத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் மீண்டும் ஓடிடியில் வெளியாகும் போது மக்களிடத்தில் அதற்கு அதிக வரவேற்பு வருவதும் வழக்கமாகிவிட்டது. திரையரங்கில் வெளியாகி ஓடாத ஒரு படம் கூட ஓடிடியில் வெளியான பின்னர் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களும் உள்ளன பல வலைத் தொடர்களும் வெளிவந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஓடிடி தலங்களில் வெளிவரும் வலைத்தொடர்கள் மற்றும் படங்களை மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். பிரதான பய...