இந்தியா, மே 17 -- குளிர்ந்த நீரில் மூழ்கி குளிப்பது உங்களுக்கு மிகவும் காமெடியான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது உங்கள் உடல் மட்டுமின்றி மனதுக்கும் நன்மை தரும் என்றால், ஏன் நீங்கள் வாரத்தில் ஒருமுறையாவது ஐஸ் பாத்தில் ஈடுபடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கடும் குளிரைக் கொடுக்கும் அந்த தண்ணீர் உங்களை எதையும் விடி அதிகம் விழிப்பு கொள்ளச் செய்கிறது. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடலுக்கு இயற்கையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உங்களை எச்சரிக்கையுடனும், புத்துணர்வுடனும் இருக்கச் செய்கிறது. குறிப்பாக காலையில் நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.

மேலும் வாசிக்க - அழகு சாதனப் பொருட்களை அதிகம் விரும்பும் நபரா? அச்சச்சோ மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!...