இந்தியா, ஏப்ரல் 30 -- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சுதர்மான் கோப்பை தொடரின் 19வது பதிப்பு சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ளது. குரூப் டி பிரிவில் டென்மார்க், இந்தோனேஷியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

இதையடுத்து இந்தோனேஷியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற நிலையில் இருந்த இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியுற்றது.

இந்தோனேஷியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் கலவை இரட்டையர் சுற்று போட்டியில் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிராஸ்டோ இந்தியாவுக்காக களம...