இந்தியா, ஏப்ரல் 1 -- மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கவேண்டும் என்பதுபோன்ற காட்சிகளை சேர்த்த இயக்குநர் பிருதிவிராஜூக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடாவிட்டால், கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக, முதல் முற்றுகை போராட்டத்தை தொடங்குவோம் எனவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சிட் ஃபண்ட் நடத்தி வரும் கோகுலம் கோபாலனின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ...