இந்தியா, ஏப்ரல் 2 -- வலதுசாரி அரசியலை விமர்சித்ததாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மலையாளப் படமான எம்புரான் திரையிடலுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் என்பவர், 'எம்புரான்' திரையிடலுக்கு தடை விதிக்க தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி சி.எஸ். டயஸ் அமர்வு மறுத்துவிட்டது. திரையரங்குகளில் 'எம்புரான்' படத்தைத் திரையிடுவதைத் தடை செய்ய உத்தரவிடக் கோரி, அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். படத்தில் 2002ல் குஜராத் கலவரங்களைக் குறிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், மத்திய அரசின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரி...