இந்தியா, மே 24 -- எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியல்: சன் டிவியில் "எதிர்நீச்சல் தொடர்கிறது" சீரியலானது திங்கள் முதல் சனிக்கிழமை, ஒவ்வொரு நாளும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அதில் மே 24ஆம் தேதிக்கான புரோமோவில் சகோதரர்களான ஆதி குணசேகரன், ஞானம், கதிர், சக்தி,ஆகிய நால்வரும் ஒன்று கூடி இருக்க, சொத்து சம்பந்தமாக ஒரு முக்கிய முடிவு எடுத்து இருப்பதாக தெரிவிக்கிறார்,ஆதி குணசேகரன்.

'ஏம்பா.. கதிர் ஒரு முடிவு எடுத்து சொத்தை என்கிட்ட ஒப்படைச்சிட்டான்.. அதைப் பத்தி நான் ஒரு முடிவு எடுக்கணும்ல' எனச் சொல்கிறார், ஆதி குணசேகரன். உடனே எல்லோரும் பரபரப்பு ஆகிறார்கள்.

அதைக்கேட்டுக்கொண்டிருந்த ஜனனி, 'அவர் என்ன கேம் ஆடுறார்னு தெரியாமல் இருந்தால் தான் பிரச்னை. இப்போதுதான் தெரிந்து போச்சுல்ல. நம்ம பார்த்துக்கலாம்' என்கிறார்.

அடுத்து நால்வரும் அமர்ந்து இருந...