இந்தியா, மே 15 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் 'வீட்டில் தன் மகளுக்கு சடங்கு செய்ய வேண்டும் என்று நந்தினி சண்டைப்போட்டுக்கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம், வீட்டில் நிம்மதியான சூழல் இருந்தால் மட்டுமே தான் வீட்டில் இருப்பேன் என்று குணசேகரன் கூறுகிறார். இதைக்கேட்டு கதிர் டென்ஷன் ஆகிறான்' தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் குணசேகரனுக்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா என்ற பரபரப்பு வீட்டிற்குள் தொற்றிக் கொண்டிருந்தது. இதற்கிடையே நந்தினி, தான் தைரியம் இல்லாதவளாக இருக்கிறோமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் ரேணுகா அவளை தேற்றி நிச்சயமாக அப்படி இல்லை என்று கூறினாள். இன்னொரு பக்கம் தம்பிகள் அனைவரும் வக்கீலின் போனுக்காக பெரியவர்களுடன் காத்துக் கொண்...