இந்தியா, ஜூன் 2 -- எதிர்நீச்சல் சீரியல் மே 26 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் வெளியான முன்னோட்டத்தில், கதிர் நெடுஞ்செழியனை கடத்தியது உண்மை என்று தெரிந்து விட்டது. ஆம், கதிரின் ஆட்கள் நெடுஞ்செழியினை தன் வசம் வைத்துக்கொண்டு தாராவின் சடங்கிற்கு செல்லாமல் பார்த்துகொண்டனர்.

மேலும் படிக்க | 'எவ்வளவு நெகட்டிவிட்டி.. சர்க்கஸ் எல்லாம் இங்க வேண்டாம்.. ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது' - கொந்தளித்த தனுஷ்

ஆனால், இது தெரியாமல் தன் தம்பி நிச்சயம் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் நந்தினி சடங்கிற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டில் பரபரப்பு தொத்திக்கொண்டது.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் தாராவுக்கு பிடித்தது போல சடங்கு விழா நடக்க வேண்டும் என்று சக்தியிடம் ஜனனி தரப்பினர் முறையிட்டனர். இந்த நிலையில் சக்தி வீட்டிற்கு வந்திரு...