இந்தியா, ஏப்ரல் 3 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், தர்ஷனின் கல்யாணத்திற்காக வீட்டை விட்டு போன பெண்களை எத்தனை முறை திரும்ப வீட்டிற்கு அழைத்தும் அவர்கள் வர மறுத்தனர். அத்தோடு நில்லாமல், மாமியாரையும் அசிங்கப்படுத்தி அனுப்பினர். இதனால், அவர்களின் ஆட்டத்தை முடிக்க நினைத்த ஆதி குணசேகரன் புதிய திட்டம் ஒன்றை தீட்டுகிறான்.

மேலும் படிக்க| ஊரார் முன் எசிங்கப்பட்டு நிற்கும் ஆதி குணசேகரன் குடும்பம்.. எதிர்நீச்சல் சீரியல்

அதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் தண்ணீரில் ஏதோ கலந்து குடிப்பது போல நடிப்பது போல் இன்று வெளியான ப்ரிவியூவில் காட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான், கதிர் வீட்டை விட்டு வெளியே போன பெண்களை வெட்ட அரிவாளோடு கிளம்பத் தயாராகிறான்.

ஆனால், அவனை விசாலாட்சியும் சக்தியும் எவ்வளவே தடுத்தும் முடியவில்லை...