இந்தியா, மே 2 -- தமிழ்நாட்டில் அடுத்த 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக விறுவிறுப்பாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியிருந்த நிலையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் ஏப்.15 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 - வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையி...