இந்தியா, மே 24 -- டெல்லி நடைபெற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது."நிதி ஆயோக்கை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னனென்ன பாக்கி உள்ளது என்பதை பட்டியலிட்டு பேசியுள்ளேன்.

பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி, கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையம் விரிவாக்க திட்டங்கள் பற்றி பேசினேன். சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க கோரிக்கை வைத்துள்ளோம். செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழி சாலையாக மாற்ற கோரிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாண்பை ந...