இந்தியா, மே 18 -- மாப்பிள்ளை சம்பா அரிசியில் கருப்பு உளுந்தை சேர்த்து ஒரு சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள். இது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும். ஏனெனில் மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் கருப்பு உளுந்து இரண்டுமே எண்ணற்ற ஆரோக்கிய நற்குணங்களைக் கொண்டது தான். இந்த சாதத்தில் நாம் சாம்பார் அல்லது புளிக்குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இதனுடன், அவியல் சேர்த்து சாப்பிட சுவையும் அசத்தும். ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆரோக்கிய உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாகும். இந்த உளுந்து சாதத்தை நீங்கள் சாதாரண அரிசியிலும் செய்யலாம். மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் சேர்த்து செய்யும்போது, அது உடலுக்கு கூடுதல் நன்மைகளைக் கொடுக்கிறது.

* மாப்பிள்ளை சம்பா அரிசி...