இந்தியா, மே 9 -- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அதன் படி, முக்கிய பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 31க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அதன் படி நேற்றைய தினம் இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத்தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நி...