Erode, மே 2 -- ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அமைந்துள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு அமைந்துள்ளது. இங்கு வயதான ராமசாமி (75 ), பாக்கியம்மாள் (65) தம்பதியினர் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்தனர். மேகரையான தோட்டப்பகுதியில் இருந்தனர். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை அறிந்த கொள்ளையர்கள் இருவரையும் கொன்று விட்டு நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த குற்ற செயல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சீமானுக்கு கொலை மிரட்டல்! இடும்பாவனம் கார்த்தி காவல்நிலையத்தில் புகார்!

இந்த தம்பதியினரின் மகன் கவி சங்கர் முத்தூரில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வரும் பெற்றோர் அடிக்கடி போன் மூலம் மகனிடம் பேசி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ளாத நிலையில் சந்தேகம் ...