இந்தியா, மே 22 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட 'இரத்தத்தின் இரத்தமே' இரத்த தான முகாமில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றது குறித்த விவர அறிக்கைகளை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் ஈபிஎஸிடம் அளித்தனர்.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக ஐடி விங் சார்பில் "இரத்தத்தின் இரத்தமே" என்ற தலைப்பில் மாபெரும் இரத்த தான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும், 12 மண்டலங்கள், 82 அமைப்பு ரீதியான மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த முகாம்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த இரத்த தான முகாமில் பல்வேறு அஇஅதிமுக நி...