இந்தியா, மே 17 -- நான் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும்' என்றும், தனக்காக யாரும் மண் சோறு சாப்பிடக்கூடாது என்றும், மாமன் பட வெற்றிக்காக மதுரையில் மண்சோறு சாப்பிட்ட தனது ரசிகர்களை நடிகர் சூரி கண்டித்திருக்கிறார். இதைக் கண்ட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க| 'தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க' - இன்ஸ்டாவில் புயலை கிளப்பியசுசித்ரா!

அவர் வெளியிட்ட பதிவில், " திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது.

இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்ல...