இந்தியா, மே 24 -- சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து பிரபஞ்சத்தை காத்து அருளிய தினம் தான் பிரதோஷத்திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருநாளில் விரதம் இருந்து வழிபட்டால் பாவத்தை அனைத்தையும் தொலைத்து விடலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் படிங்க| குரு பகவானின் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்

அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலை தேவர்கள் மற்றும் அசுரர்கள் கடைந்து எடுத்தனர். அமிர்தத்தை உண்டால் மரணம் இல்லாத வாழ்க்கை வாழலாம் என மகாவிஷ்ணு தேவர் அவர்களிடம் கூறினார். அதனை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியினை நாடினர்.

அதன் பின்னர் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இருவரும் சேர்ந்து பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தி அமிர்தம் கடையை தொட...