இந்தியா, மே 15 -- விஷ்ணு பகவானை போற்றும் விதமாகவும் வழிபடும் விதமாகவும் எத்தனையோ திரு நாட்கள் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட விசேஷம் மிகுந்த நாட்களில் யாரும் அறியாத சிறப்புக்குரிய வேண்டுதல் திருநாள் தான் விஷ்ணுபதி புண்ணிய காலம்.

ஒரு ஆண்டு காலத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகின்றது. இந்த திருநாளில் விஷ்ணு பகவான் மற்றும் தாயார் லட்சுமி வணங்கி வேண்டுதல் செய்வது அதிகமாக திகழ்ந்து வருகின்றது.

தமிழ் மாதத்தின் கணக்கின்படி வைகாசி மாதம், ஆவணி மாதம், கார்த்திகை மாதம் மற்றும் மாசி மாதம் ஆகிய மாதங்களில் முதல் தேதியில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அது அமைகின்றது.

மேலும் படிங்க| செவ்வாய் பகவானின் ராஜயோகத்தை அனுபவிக்கும் ரா...