இந்தியா, மே 2 -- ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அமைந்துள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு அமைந்துள்ளது. இங்கு வயதான ராமசாமி (75 ), பாக்கியம்மாள் (65) தம்பதியினர் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்தனர். மேகரையான தோட்டப்பகுதியில் இருந்தனர். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை அறிந்த கொள்ளையர்கள் இருவரையும் கொன்று விட்டு நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த குற்ற செயல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரட்டைக் கொலை செய்தி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆளும் கட்சியான திமுக அரசின் ஆட்சி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | ஈரோட்டில் வயதான தம்பதியினரை அடித்துக் கொன்ற கொள்ளையர்கள்! தமிழ்நாட்டை அதிர வை...