இந்தியா, ஏப்ரல் 29 -- தமிழ் சினிமாவில் 1980களின் இறுதியில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மனதை மயக்கும் தனது இனிமையான குரலால் மெலடி முதல் குத்து பாடல் வரை அனைத்து வகையான பாடல்களையும் பாடி அனைத்து வயதினரையும் ரசிக்க வைத்தவர் மறைந்த பாடகி ஸ்வர்ணலதா.

கேரளா பூர்வீகம், கர்நாடகாவில் படிப்பு, பின்னர் சென்னைக்கு குடியேறி இசை உலகில் தனக்கென தனியொரு அரியணை அமர்ந்தவராக உள்ளார். தேசிய விருது வென்ற முதல் பின்னணி பாடகி என்ற பெருமைக்கு உரியவராக இருந்து வரும் ஸ்வர்ணலதா தமிழ் சினிமாவின் நைட்டிங்கேல், ஸ்வரங்களின் அரசி, ஹம்மிங் குயின் என பல செல்ல பெயர்களில் அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: களவாணி மூலம் மக்கள் மனதை களவாடிய நாயகி ஓவியா பிறந்தநாள்

இசைக்குடும்ப பின்னணியில் இருந்த வந்த ஸ்வர்ணலதாவுக்கு இயல்பிலேயே இசை மீதான ஆர்வம் தொற்றிக்கொள்ள, மூன்று ...