இந்தியா, ஜூன் 30 -- லாப நோக்கம் மட்டும் இல்லாமல் சமூக பொறுப்புணர்வுடனும் மனித நேயத்துடனும் வணிகங்களை நடத்தியதற்காக சார்லஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ்' எனும் உயரிய விருது வழங்கி உள்ளது.

விருது பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 'லாட்டரி கிங்' சான்டியாகோ மார்ட்டினின் மூத்த மகன் ஆவார். இவர் 'சவுத் ஸ்டார் ரயில்' என்ற இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை வழங்குநர் என கூறப்படுகிறது. மார்ட்டின் குழுமத்தின் இயக்குனராகவும், மீடியா, கட்டுமானம், ரயில்வே மற்றும் விளையாட்டு என பல்வேறு வணிகத் துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, மற்றும் லாப நோக்கம் இல்லாத மனிதாபிமான உணர்வுடன் வணிகங்களை உருவாக்கியதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் ஜோஸ் சார்ல...