இந்தியா, மே 27 -- ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் என்பது, பச்சை மாங்காயை வைத்து செய்யப்படும் ஒரு பாரம்பரிய ஊறுகாய் ஆகும். இதன் புளிப்பு, காரம் மற்றும் கொஞ்சம் இனிப்பு சுவைக்காக இது அறியப்படுகிறது. பச்கை மாங்காயில் கடுகுப் பொடி, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் சேர்த்து செய்யப்படுவது ஆகும். இதில் சேர்க்ப்பாடும் மாங்காய் புளிப்புச் சுவையைத் தரும். கடுகு காட்டமான கார சுவையைத் தருகிறது. வெந்தயம் கசப்புச் சுவையைக் கொடுக்கிறது. உப்பு உவர்ப்புச் சுவையைக் கொடுக்கிறது. மிளகாய் கராம் மற்றும் வண்ணத்தைக் கொடுக்கிறது. எண்ணெய் பிரிசர்வேட்டிவாகவும் செயல்படுகிறது. இது சுவையை அதிகரித்தும் கொடுக்கிறது. ஆந்திர உணவுகளில் இந்த ஊறுகாய் எப்போதும் இடம்பெறும். இந்த ஆவக்காய் மாங்காய் ஊறுகாயைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* ஆவக்காய் மாங்காய் - 2 (விதைகளை ...