இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கையும் விடுத்தது. 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தூண்டிவிட்டு பாகிஸ்தான் தான் முதலில் தொடங்கியது, நாங்கள் பதிலடி மட்டுமே தருகிறோம்' என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். மேலும், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மேலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று மாலை ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​"ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதல்தான் முதல் தாக்குதல், இந்திய ஆயுதப்படைகள் நேற்று அந்த தாக்குதல்களுக்கு பதிலளித்தன. இந்தியா போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. பதிலடி மட்டுமே கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர...