இந்தியா, மே 7 -- மே 7 தேதியான இன்றைய தினம் இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள (போக்) 9 முக்கிய பயங்கரவாத தளங்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலைத் நடத்தியது. அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடந்த தாக்குதலை கடற்படை, விமானப்படை, ஆயுதப்படை ஆகிய முப்படைகள் சேர்த்து நடத்தின.

இந்திய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்களில் முசாபராபாத்தின் சவாய் நாலா முகாம், சையத்னா பெலால் முகாம், குல்பூர் முகாம், அப்பாஸ் முகாம், பர்னாலா முகாம், சர்ஜால் முகாம், மெஹ்மூனா ஜோயா முகாம், மார்கஸ் தைபா மற்றும் பஹவல்பூரில் உள்ள மார்கஸ் சுபான் உள்ளிட்டவை அடங்கும்.

ஏப்ரல் 22 நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில...