இந்தியா, மே 12 -- 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் மே 7 அன்று இந்தியாவின் துல்லியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களில் பாகிஸ்தானின் உயர் போலீஸ் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகளின் பெயர்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் பஹவல்பூரின் முரிட்கேவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | இந்தியா, பாக்., மோதல் நிறுத்தத்திற்குப் பிறகு சந்தை மீண்டும் திறப்பு.. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு

இறுதிச் ச...