இந்தியா, மே 28 -- ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், அம்மாநிலம் முழுவதும் தியேட்டர் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், உணவு, குளிர்பானம் மற்றும் டிக்கெட் விலையை முறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தனியாக அல்லாமல் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மூலம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை வைக்கலாம் என்றும் இதில் அவரது நடிப்பில் ஜூன் 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஹரி ஹர வீர மல்லு படமும் அடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பவன் கல்யாண் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ' அரசு துறைகள் தங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும். விலை மற்றும் செயல்பாடுகளில் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து ஒளிப்பதிவு அமைச்சர் கே. துர்கேஷ் அளித்த விளக்கத்தின்படி, அதிக விலை கொண்ட பாப்கார...