Chennai, மே 17 -- கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், வெப்பம் காரணமாக தோல் பழுப்பு நிறமாகிவிடுகிறது. இதனால், முகம் கருப்பாக மாறி உயிரற்றதாகத் தெரிகிறது. முகத்தில் தோன்றும் பழுப்பு நிறத்தை அகற்ற பல்வேறு விதமான க்ரீம்களும், ப்யூட்டி பொருள்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் காசு கொடுத்து அழகு சாதன பொருள்கள் வாங்காமல், செலவு செய்து ப்யூட்டி பார்லர் போகாமல் வீட்டில் இருந்தபடியே முகத்தின் கருமை போக்கி இன்ஸ்டன்டாக பளபளப்பை பெற உதவும் க்ரீம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

தினமும் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனைப் பூசி, முகத்திலும் வாயிலும் ஸ்கார்ஃப் கட்டிய பிறகும், தூசி, அழுக்கு மற்றும் வியர்வை முகத்தின் பளபளப்பை மங்க செய்கின்றன. எனவே இதற்கு சரியான சாய்ஸாக முகத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்கும் கிரீமாக, உருளைக்கிழங்கு கிரீம் உள்ளது. சருமத்துக்க...