இந்தியா, மே 5 -- அய்யனார் துணை சீரியல் மே 5 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், சேரனின் வீட்டிற்கு போலீஸ் வந்து, கஸ்தூரியின் அப்பாவை அடித்ததற்காக சேரன் உட்பட அவர்களது தம்பிகள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்தது. ஆனால், சேரனின் அப்பாவோ அவர்களை விடமாட்டேன் என்று சொல்லி போலீஸ் உடன் வந்திருந்த கஸ்தூரியின் அப்பாவிடம் சண்டைக்கு சென்றார்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

அவருக்கு சப்போர்ட்டாக அவரது மகன்களும் தாறுமாறாக பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் உள்ளே புகுந்த போலீஸ், என் கண் முன்னே இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று சொல்லி இரு தரப்பையும் அடக்கினார். தொடர்ந்து போலீஸ் சேரனையும் அவனது தம்பிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்...