இந்தியா, மே 29 -- அய்யனார் துணை சீரியல் மே 29 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்னோ அல்லது திருமண நாளிலோ சேரனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதில் நிலாவும் சேரனின் தம்பிகளும் உறுதியாக இருந்தனர். இதனால், அதற்கான வேலைகளில் முழு மூச்சோடு இருந்த நிலையில், கார்த்திகா சேரனை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளார்.

மேலும் படிக்க| நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு.. தமிழ் திரையுலகிற்கிற்கு பேரிழப்பு..

இந்த நிலையில், கார்த்திகாவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவள் சேரனைப் பார்க்க அவனது வீட்டிற்கு வந்தாள். இதைப் பார்த்த சேரன் கார்த்திகாவை இனி வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறினான். உனக்காக நான் அசிங்கப்படுவது பரவாயில்லை. ஆனால், என் தம்பிகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என சொல்லி கார்த்திகாவை வெளியே அனுப்...