இந்தியா, மே 19 -- அய்யனார் துணை சீரியல் மே 19 எபிசோட்: நிலா தனது கல்யாணத்தை பற்றிய உண்மையை வீட்டில் உள்ள எல்லார் முன்னிலையிலும் கூறிவிட்டாள். இதனால், அவளது கனவுக்கு துணையாய் நிற்க அண்ணன் தம்பி 4 பேரும் சத்தியம் செய்தனர். இதையடுத்து, வேலை கிடைக்க முதலில் காலேஜ் சர்ட்டிபிகேட் எல்லாம் தேவைப்படும் அதை வாங்க வேண்டும் என சோழன் நிலாவிடம் கூறினான்.

மேலும் படிக்க| சமந்தாவுக்கு வந்த சோதனை.. முதல் படத்திலேயே இப்படியா? சுபம் ஓடிடி ரிலீஸில் சிக்கல்!

இதைக் கேட்ட நிலா, அதை எல்லாம் நான் பாத்துக்கிறேன். எனக்காக யாரும் யோசிக்க வேண்டாம் எனக் கூறியதோடு நில்லாமல், அந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். அதை தனியாக பார்த்துக் கொள்கிறேன் என்றும் திட்டவட்டமாக கூறினாள். இந்த விவகாரத்தில் சிம்பதி கிரியேட் செய்து நிலாவுடன் காலேஜ் போகலாம் என சோழன் திட்டம் போட்டான...