இந்தியா, மே 17 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலா கல்லூரிக்குச் சென்று சான்றிதழ்களை வாங்குவதற்காக ரெடியாகி கொண்டிருந்தாள். அவளுக்கு பிஸ்கட், தண்ணீர் என எல்லாவற்றையும் சேரன் எடுத்து வைத்து அனுப்பினான். அவள் வெளியே வந்த பொழுது, சோழன் அவளுக்காக காரை ரெடி செய்து கொடுத்தான்.

இதையடுத்து நிலா காரில் சென்றாள். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக வழியிலேயே சேரனின் அப்பாவும் காரில் ஏறிக்கொண்டார். தொடர்ந்து நிலாவுக்கு பாத்ரூம் செல்வதற்கு வசதியாக காரை நிறுத்த வைத்தார். தொடர்ந்து அவளுக்கு மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்தார். ஒரு பக்கத்தில் அந்த டிரைவரிடம் இருந்து காரை வாங்கி, தானே கல்லூரிக்கு காரை ஓட்டி வந்தார்.

மேலும் படிக்க | ராஜமெளலி மீதான அதிருப்தி-'தாத்தா வாழ்க்கைய படமா எடுக்க எங்ககிட்ட அனுமதி வாங்க வேண்டாமா?';தாதாசாகேப் பால்கே பேரன் பேட்டி...