இந்தியா, மே 14 -- அய்யனார் துணை சீரியல் மே 14 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சோழனும் நிலாவும் விவாகரத்து கேட்டு வக்கீலிடம் சென்ற விஷயம் கேட்டு பாண்டியன் கடும் கோபத்தோடு வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறான். அப்போது, நிலைமையை சமாளிக்க முடியாமல் சேரனும் நிலாவும் எல்லோர் முன்னிலையிலும் உண்மையை உடைக்கின்றனர்.

மேலும் படிக்க| ஓடிடி பக்கம் திசையை திருப்பவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி.. தியேட்டரைப் போல ஓடிடியிலும் ஹிட் அடிக்குமா?

இந்த விஷயத்தைக் கேட்டு பல்லவனும் பாண்டியனும் உடைந்து போய் நிற்கின்றனர். பல்லவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. யாரும் யாரோடும் பேசமால் ஒவ்வொரு இடமாக அமர்ந்து அழுதுகொண்டு இருக்கின்றனர். அப்போது, பாண்டியன் உண்மை என்ன என்று தெரியாமல் தன் அண்ணன் சேரனை தவறாக நினைத்து திட்டிவிட்டதை நினைத்து குற்ற உணர்ச்சியில் தவி...