இந்தியா, மே 13 -- அய்யனார் துணை சீரியல் மே 13 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் டைவர்ஸ் வாங்க சென்ற விஷயத்தை பாண்டியனிடம் வக்கீல் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட பாண்டியன் கோவத்துடன் வீட்டிற்கு வருகிறான்.

மேலும் படிக்க| 'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி

அதற்கு முன்னதாக நிலாவும் பல்லவனும் வீட்டில் பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டிற்கு வந்த சேரன் தலைவலி தாங்க முடியவில்லை. அதனால் வேலை செய்ய முடியாமல் வீட்டிற்கு வந்ததாக சொன்னான். இதைக் கேட்ட நிலா சேரனுக்கு காஃபி போட்டு தருவதாக சொல்லி, கிளம்ப அவளை சேரனும் பல்லவனும் கிண்டல் செய்தனர். காரணம் நிலா போட்ட டீயை இதற்கு முன் குடித்ததன் விளைவு தான். ஆனால், இப்போது தான் எல்லாத்தையும் கற்றுக் கொண்டதாக கூறி நிலா ச...