இந்தியா, மே 12 -- விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை!

அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலாவும், பல்லவனும் கோயிலில் உட்கார்ந்திருக்க நிலா, கார்த்திகாவிற்கும் சேரனுக்கும் இடையிலான காதல் குறித்து பேசிக் கொண்டிருந்தாள். அந்த இடத்திற்கு கார்த்திகா வந்த நிலையில் பல்லவன் டென்ஷன் ஆனான்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மே 12 எபிசோட்: மகேஷுக்கு கத்திக்குத்து.. காப்பாற்ற வந்த கார்த்தி, சாமுண்டீஸ்வரிக்கு ஷாக்!

அத்துடன் உங்களால் எங்களுக்கு தொடர்ந்து பிரச்சினை வருகிறது; பின்னர் ஏன் மீண்டும் மீண்டும் வருகிறீர்கள் என்று சாட, பின்னர் நிலாவும் கார்த்திகாவும் உட்கார்ந்து பேசுகிறார்கள். கார்த்திகா சேரன் மீது உள்ள காதலை வெளிப்படுத்திய அதே நேரம், தன்னுடைய குடும்பச் சூழல் குறித்தும் ...