இந்தியா, மே 10 -- அய்யனார் துணை சீரியல் மே 10 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், அண்ணியின் ஆலோசனை படி, சோழனிடமிருந்து எப்படியாவது டைவர்ஸ் வாங்கிவிடலாம் என்ற முடிவில் நிலா இருந்தாள். இதற்காக சோழனும் நிலாவும் வக்கீலிடம் சென்று பேசியும் ஆதார் கார்டு விஷயத்தில் ஆஃப் ஆகி வீடு திரும்பினர்.

மேலும் படிக்க| எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..

நிலாவை இப்படியே விட்டால் அடுத்தடுத்த வக்கீலிடம் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பாள் என நினைத்த சோழன், திருவண்ணாமலையில் சோழனுக்கும் நிலாவிற்கும் கல்யாணம் செய்து வைத்த போலீஸ் வாழவந்தானுக்கு போன் செய்து, நிலாவின் வீட்டில் இருப்பவர்கள் அவளை மிரட்டி டைவர்ஸ் வாங்க வைக்க திட்டமிடுவதாகவும் இதனால், நிலாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லியதோட...