இந்தியா, ஜூன் 9 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 09 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலா ஆதார் கார்டு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்க, அவளது அண்ணி அவளுக்கு போன் செய்து ஆதார் கார்டு நம்பரை தவறாக சொல்லி விட்டதாகவும், அந்த நம்பர் தன்னுடையதுதான் என்றும் கூறினார்.

மேலும், தான் ஆதார் கார்டு கிடைப்பதற்கு உதவியது அண்ணனுக்கு தெரிந்து விட்டதாக கூறிய அண்ணி இனி தன்னால் உதவ முடியாது என்று கூறிவிட்டாள். இந்த நிலையில் ஏற்கனவே சோகத்தில் இருந்து நிலா இன்னும் வருத்தமடைந்தாள். இதைப் பார்த்த சோழன் ஆதார் கார்டு கிடைப்பதற்காக ப்ரோசிங் சென்டர் சென்றான். ஆனால், அங்கு அவர்கள் முகவரி ஆவணத்தை கேட்டனர். இதனால் அங்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

போன் கடைக்கு சென்று இழந்த எண்ணை எடுத்து விடலாமென்று முயற்சி செய்தால், அங்கும் முகவரிக்கான அடையாளத்தை கேட்...