இந்தியா, ஏப்ரல் 30 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், சேரன் நிலாவிடம் நீ இங்கேயே இருந்து விடு.. வெளியே வீடு பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், நிலாவோ அது சரியாக வராது என்று வாதம் செய்கிறாள். ஒரு கட்டத்தில் அவளை வற்புறுத்த விரும்பாத சேரன், என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். அதன் பிறகு உன்னுடைய முடிவு என்று கூறிவிட்டார்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

இதற்கிடையே பல்லவன் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பெண்ணின் புரொபைலை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவள் யார்? எதற்காக அவளை பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பதையெல்லாம் நிலா அவனிடம் கேட்டாள். அதற்கு பல்லவன் அவள் தன்னுடன் கல்லூரியில் படிப்பதாகவும், தனக்கு அவளை மிகவும் பிடிக்கும...