இந்தியா, மே 6 -- மதுரையை சேர்ந்த பாஜக பெண் பிரமுகர் பட்டுக்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் செருப்பு எறிந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் பகுதியில் திருமணம் ஆகி வந்து அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்...