இந்தியா, மார்ச் 17 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க கோரிய நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

சபாநாயகர் அப்பாவுவை பதிவியில் நீக்க கோரி எதிர்கட்சியான அதிமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு டிவசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் படி உறுப்பினர்கள் எழுந்து நின்று தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆறு டிவிசன்களாக இருக்கிறது. முதல் டிவிசனில் முதலமைச்சர் அமர்ந்திருக்கும் வரிசை. இந்த வாக்கெடுப்பின் படி அப்பாவுவை நீக்க வேண்டுமானால் தொடர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு செய்தால் அப்பாவு நீக்குவதற்கான தீ...