இந்தியா, மார்ச் 21 -- Gajakesari Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும் பொழுதும் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

சில நேரங்களில் கிரகங்கள் இடமாற்றம் செய்யும் பொழுது மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் கிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சந்திர பகவான். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழை...