இந்தியா, மே 17 -- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று, பிரம்மாண்டமான திருத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆறு நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. ஏழாம் நாளான இன்று 72 அடி உயரமுள்ள, ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.

காந்தி சாலையில் உள்ள தேரடியில்...