இந்தியா, மே 6 -- ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும். ஆஸ்துமா ஏற்பட்டால், மூச்சுக்குழாய்கள் வீங்கலாம், குறுகலாம், மற்றும் அதிகப்படியான சளி சவ்வினால் மூடப்படலாம், இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது பரம்பரை, சுற்றுசூழல் காரணிகள் என பல்வேறு காரணிகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய நோயாகும். அதிலும் நவீன உலகில் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாட்டினால் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க | சர்வதேச உணவுமுறை இல்லாத தினம் ஏன் கொண்டாடப்படுகிறது எனத் தெரியுமா? நோக்கம் மற்றும் வரலாறு அறிவோம்!

உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கக்கப்படுகிறது. இந்த தினம் மக்களிடத்தில் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆஸ்துமா நோயாளர்களின் ...