இந்தியா, மே 25 -- கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது" வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை முதல் இரவு வரை ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில், பாத...